Sunday, December 25, 2011

ஆதியின் பேச்சுக்குரல்




காலமழை பெய்கிறது

காற்று நனைந்த வெளியில்
துளிர்க்கும் தளிரென
உயிர் பற்றிக்கொண்ட தேகங்கள்
முயங்கி சரிகின்றன

இசைக்க , வியக்க ,ஒளிரவென
இல்லாமல் போகவென
நேசம் சிக்கிக் கொண்டோடுகிற
பொழுதுகளின் நதியில்

நான் நனையாத துளிகள்
சூட்சமத்தின் கடலாகிறது .

மீந்திருக்கும் துளிகளில்
நனைந்து நனைந்து
இன்பம் துன்பம்
இரண்டுக்குமான விதையென
போதிமரத்தின் கிளையொத்து
வெடித்து படர்கிறேன்.

திறந்து கிடக்கும்
இவ்வளவு பெரிய நிலத்தில்
சாவியை தேடுகிறது வார்த்தை

ஆயுளை சிறைகொண்டு
சூட்சமக் கடலில்
ஒளிந்து கிடக்கிற

வார்த்தையின் உயரத்திலிருந்து
இடறிவிழும் துறவுகளில்
ஆதியின் பேச்சுக்குரல் கேட்கிறது
 —